More than a Blog Aggregator night writter

Thursday, February 3, 2022

ஜனவரி  மாத  DIVIDEND TRAILER

Dividend வருவாய்  பற்றிய சின்ன முன்னோட்டம், அதையும் சினிமா தனமாய் யோசித்ததின் விளைவு 

இது வெறும் trailer தான் 




Tuesday, January 25, 2022

TFSA ஓர் எளிய விளக்கம்

 அன்பு இணைய நட்புக்கு வணக்கங்கள்,

வீடியோவாக பார்பதற்கு கீழே உள்ள LINKயை கிள்க் செய்யவும்

👇👇👇



இந்த இழையில் TFSA a/c என்றால் என்ன என்பதை, எனக்கு தெரிந்த மட்டில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இங்கு கனடாவில் நாம் சம்பாரிக்கும் ஒவ்வொரு டாலருக்கும் வரி கட்ட வேண்டும் பெரும்பாலும் வரி பிடித்தம் போக மீதம் தான் நம் கையிக்கே வரும். ஆனால் நீங்கள் ஈட்டும் எந்த ஒரு வருமானத்துக்கும் வரி கட்ட தேவையில்லை என்றால் எப்படி இருக்கும். ஆச்சிரிய பட வேண்டாம் அது தான் உண்மை. 

நீங்கள் முதலீடு செய்த, கவனிக்கவும், சேமித்த அல்ல, முதலீடு செய்த மூலதனத்தின் வருவாய் மற்றும் அபிவிருத்தி - அனைத்துக்கும், அது எவ்வளவு பெரிய தொகையாய் இருந்தாலுமே நீங்கள் ஒரு சென்ட் கூட வரி செலுத்த தேவையேயில்லை. அந்த முதலீடு TFSA a /cடில் இருந்தால். 

ஒப்பீட்டளவில் நம் ஆட்களுக்கு சேமிக்கும் பழக்கம் மற்றவர்களை விட சற்றே அதிகம். ஆனால் முதலீடு செய்யும் பழக்கமோ வழக்கமோ நம்மிடம் அவ்வளவாய் இல்லை. உதாரணமாய் என்னையே நான் சொல்வேன். கனடா வந்த புதிதில் TFSA பற்றி கேள்வி பட்டு எனது வங்கியில் ஒரு TFSA a/c ஆரம்பித்தேன். அதில் மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையும் செலுத்தி வந்தேன். சில மாதங்கள் கிழித்து வங்கியில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அந்த உரையாடலின் சுருக்கம் இதோ -- நீங்கள் chequing a/c, saving a/c மற்றும் TFSA a/c வைத்து இருக்கின்றீர்கள் அனைத்திலும் சிறு தொகையும் வைத்திருக்கின்றீர்கள்.

saving a/c மற்றும் TFSA a/c இரண்டையும் ஒரே மாதிரி கையாளுகின்றீர்கள் TFSA a/cடையை இன்னும் முழுமையாய் பயன் படுத்த நீங்கள் ஏதாவது ஒரு mutual fundலோ equity fund லோ அல்லது GICலோ முதலீடு செய்ய வேண்டும் அப்போது தான் அதன் முழு பயனையும் அடைவீர்கள் என்று கூறி ஒரு mutual fundடையும் பரிந்துரை செய்தார். நானும் அவ்வாறே செய்தேன் அதை ஒரு மாத செலவாய் எண்ணியே  automated withdrawal மூலம் செய்து வந்தேன். 

2 வருடங்கள் பிறகு ஒரு இன்ப அதிர்சசி எனக்கு காத்திருந்தது. நான் செய்த முதலீடு 30% வளர்ந்து இருந்தது. அதன் பின்னே தான் stock market பற்றிய அறிமுகமும் மற்றும் வளர்சசியும் கண்டேன்.

இதற்கு TFSA என்று பெயர் வைத்ததற்கு பதிலாய் Tax Free Invesment Account என்று தான் வைத்திருக்க வேண்டும். 

சரி இப்போது இதை யார் யார் தொடங்கலாம் என்று பார்ப்போம். கனடாவில் வசிகின்ற  18 வயது பூர்த்தியான எவரும் தொடங்கலாம். ஒரு வேலை நீங்கள் இத்தனை ஆண்டுகளாய் இங்கே வசித்தும் தொடங்கவில்லை என்றால் கவலை பட வேண்டாம், இப்பொழுதே தொடங்கி விட்ட அத்தனை வருட தொகையும் எப்பொழுது வேண்டுமானாலும் செலுத்தி விட்டதை பிடித்து கொள்ளலாம். அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் இதில் இட்டு ஈட்ட அனுமதி தருவார்கள்.

உங்களுக்கு 2009ல் 18 வயதோ அல்லது அதற்கு மேலோ பூர்த்தி ஆகி கனடாவில் அன்று முதல் இன்று வரை விசித்திருந்தால் உங்கள் பயன் பாட்டுக்கு உள்ள தொகை 75000$. எனவே better late then ever என்பது போல் இதுவரை நீங்கள் இதை பயன் படுத்த வில்லை என்றால் இனிமேல் இதை பயன் படுத்தி கொள்ளலாம்.    

உங்கள் வங்கிகளிலோ வேறு முதலீட்டாளர்களிடமோ அல்லது Wealth Simple, Questrade போன்ற appகளிலோ ஒன்றோ அதற்கும் மேற்பட்டோ எத்தனை TFSA வேண்டும் என்றாலும் தொடங்கி கொள்ளலாம். அதிலும் self direct trading accountடோ அல்லது automated மற்றும் advised fund purchaseலோ சேர்ந்து பயன் பெறலாம்.

வங்கிகளில் national bank தவிர்த்து அனைத்து வங்கிகளிலும் டிரேடிங் fee மற்றும் MER fee mutual fundடுகளுக்கு வசூலிக்க படும். 

appகளில் Wealth Simpleலில் எந்த ஒரு ட்ரடுக்கும் fee கிடையாது மற்றும் உபயோகிக்க மிகவும் எளிமையான ஒன்றும் கூட. இந்த appபினை தரவிறக்கி UMRIBA என்னும் referral code பயன்படுத்தினால் உங்களுக்கு இலவசமாய் சில stockகின் shareகலோ அல்லது பணமோ கிடைக்கும்.

எந்த share வாங்கலாம் என்ற பரிந்துரை தெரிந்து கொள்ள இந்த channelலை subscribe செய்து கொள்ளவும். 

நட்புகளுக்கு நன்றியும் வணக்கமும். 





Sunday, January 17, 2021

பங்கு சந்தை இரகசியம்

பங்கு சந்தை இரகசியம் 

பங்கு சந்தையில் முதலீடு செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் இந்த வீடியோவில் உள்ளது 

எது முக்கியம் நீங்கள் போடும் பணத்தின் அளவா இல்லை  எத்தனை ஷேர்கள் வைத்திருக்கின்றீர்கள் என்பதா ? 
விடை வீடியோவில் ....



subscribe செய்யுங்கள்.

Friday, January 1, 2021

HOW TO PICK A SHARE IN STOCK MARKET



Hi friends in this video I'm going to show how I choose a share in the stock market.

 before that, I want to choose the sector. Let's start from this


 Nowadays everybody has a cell phone it’s become essential In our daily life 

you pay the mobile bill every month

 how much we pay a month

 The basic plan starts from 35  dollars and it goes high to $85   or more 

So I am going to the communication sector


 in that Telus is my choice for today.

 so  here is their Revenue

 you can see it's growing organically for the last 3 years so the profits are 

now their  net income also in increasing mode but they just missed a little bit in this year as everyone knows it's because of the pandemic 

 Telus communication is  owned by Telus Corporation where the headquarter is in Vancouver

Today prices are 25 dollars $0.21 and it's paying a dividend off 4.94percentage which I want to hear

now let's go see what the experts say


 most of them Recommending to  strong buy and   buy  and few of them recommending to hold it

 you can see none of them is recommending   to sell  or underperform so I definitely go with the expert’s advice

  the price ranges are - high price is 32 dollar  where 24  is the low price and the average is 26.77 

 the current price is $25 so it's a good chance to buy this company right now but I’m looking for a long term investment so I am waiting to get it a little bit down to $20 

what makes the difference if buying at a low cost  will have a chance of a huge profit when the  price go high and

 even  if the price goes low it doesn't hurt too much

1 minus point in Telus is, they r a little behind on the race of 5 g when comparing to its peers.

Still, they have time to take a leadership position in the race. It is my own opinion.


Their Revenue, earnings, profit, and future plans are convincing me to buy it. 

The next step is going to compare with their peers and the final step is to invest. 


Here v can c the dividends paying by telus

They keep on increasing it even on the pandemic year




Make money work for you

Saturday, November 21, 2020

பண்டிகை 

பண்டிகைகள் மனிதனுக்கு மட்டற்ற மன மகிழ்ச்சியை தரும். அதற்கு முதன்முதல் காரணமாய் நான் எண்ணுவது  கொண்டாட்டம். அக்கொண்டாட்ட மன நிலையை கூட்டுவது - கூடியிருத்தல், சொந்தம் சூழ கூடி கும்மியடிப்பது (பண் இடுகை மருவி பண்டிகை என்றானதோ) மன நிறைவை, மகிழ்வை அதிகரிக்கும் செயல்கள். அன்பை, மகிழ்வை பரிமாறி கொள்வதில் உள்ள ஆனந்ததிற்கு என்றும் அளவேயில்லை.

என் பள்ளிக்கால பண்டிகை விடுமுறை நாட்களில் குடும்ப சொந்தங்கள் எல்லோரும் ஒன்று கூடி  கூத்தடித்தது இன்றும் என் நினைவில் பதிந்த பசுமையான, இனிமையான தருணங்கள்.

 பசுமை வயலில் சாமி கும்பிட்டது 

பனங்காய் பறித்து தின்றது 

பம்செட்டில் குளித்தது 

என்று என்றும் மறக்க முடியா மலரும் நினைவுகள் அவை. 

தபால் கார்டு மூலம் வாழ்த்து எழுதி போட்டு, 

                                                           பெற பெற்று 

                                                           அதை சேர்த்து வைத்து 

அழகு பார்த்தல் ஒரு கவித்துவமான நிகழ்வுகள்.  இவை இன்று இணையத்தால் இழந்தவை என்று குறை கூறுவதற்கு பதில், அதை இணையத்தில் இணைத்து பார்க்க, இவ்வாண்டு தீபாவளியில்  ஓர் சிறு முயற்சி செய்து பார்த்தேன். நான் பகிர்ந்து கொண்ட அணைவரும் என்னை வெகுவாய் பாராட்டிய பொழுது பாலிய வயதிற்கே சென்றேன்.

கார்டு போட்ட காலம் போய் போனில் எல்லாம் முடித்துக் கொள்ளும் காலமும் வந்தது. மூச்சுக்கு முந்நூறு தடவை போன கிராமத்துக்கு, முடிந்தால் மட்டுமே போவது என்றானது. ஆனால் போகின்ற ஒவ்வொரு முறையும் வட்டியும் முதலுமாய் சேர்த்து வைத்து கொண்டாடி தீர்த்து விடுவது வழக்கமாய் ஆகிவிட்டது. 

டெல்லியில் இருந்தபோது ஹோலி கொண்டாடியது ஒரு புது அனுபவம். ஊரே உற்சாகமாய் இருக்கும், அது நம்மையும் தொற்றி கொள்ளும். தெரியாத ஊர் - பழகாத மக்கள் - புரியாத மொழி - அறியாத பண்டிகை என்பதையெல்லாம் தாண்டி நம்மை உள்ளிழுத்து கொள்ளும் சக்தி பண்டிகைகளுக்கு உண்டு. அதன் மூலம் புது உறவகள் பிறக்கும், வலுவாகும், அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும். ஊரு விட்டு ஊரு போன பின் தான் தொலைபேசி வாழ்த்தின் மகிமை உணர்தேன். புது துணி அணிவதில் கிடைக்காத உற்சாகம், தின்பண்டகளில் கிடைக்காத மன மற்றும் வயிற்றின் நிறைவு தாய் தந்தையிடம் இருந்து வரும் அந்த தொலைபேசி குரலில் நிறைவடையும். வாழ்க அறிவியல்.

நாடு விட்டு நாடு சென்ற போது(UK) கொண்டாடிய பண்டிகை halloween. அவ்விரவு முழுவதும் தூங்காமல் எலும்பு கூடு ஆடை அணிந்து அலைந்தது ஒரு திகில் அனுபவம்.  இன்று என் மகனின் விருப்ப விழாக்களில் halloweenவியனும் ஒன்று. வெவ்வேறு பண்டிகைகள் உலகம் முழுக்க இருந்தாலும் அவற்றில் ஒரு ஒற்றுமை உண்டு, அது பகிர்தல். வெறும் கூடை எடுத்து ஒவ்வொரு வீடாய் சென்று அதில் இனிப்பும் பரிசுமாய் நிரப்பி கொண்டு வரும் சிறுவர்களின் மன நிறைவும் மகிழ்சசியும் சொல்லில் அடங்காது, சொல்லியும் புரியாது. கொடுப்பதிலிலும், பெறுவதிலும் உள்ள உள்ளுணர்வு ஓர் உயர்ந்த உணர்வு. 

இருக்கும் பண்டிகைகளிலே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று பொங்கல். காரணம் 
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று 
என்ற முப்பாட்டன் வள்ளுவன் வாக்குக்கு சான்றாய் கொண்டாட படும் ஒரு பண்டிகை பொங்கல். விருந்தோம்பலில் சிறந்த நம் சமூகம் நன்றி நவிழ்த்தலை நாட்கணக்காய் கொண்டாடி தீர்க்கும் சிறப்பு வாய்ந்த பண்டிகை அல்லவா இப்பொங்கல் பண்டிகை. கரும்பு தின்ன கூலியா என்ற எண்ணம் எழுகிறது பொங்கலை பற்றி எண்ணுகையில்.
பழையன கழிதலும் புதியன புகுதலுமே, பூமி என்றும் புத்துயிருடன் இருக்க காரணம். அதையே நாம் போகி பண்டிகையாய் கொண்டாடி மகிழ்கின்றோம். அப்படி ஒரு பழைய சம்பவமான புத்தாடை தைத்து போடும் பழக்கத்தில் இருந்து விடுபட்டு முதன்முறையாய் ஆயுத்த ஆடை நான் அணிந்தது 90களின் தொடக்கத்தில். அப்பொழுதெல்லாம் விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாளில் வண்ண ஆடை அணிந்து செல்ல அனுமதி உண்டு. அப்படி ஒருமுறை பண்டிகை ஆடை (readymade)  அணிந்து பள்ளி சென்ற நாளில் கிடைத்த அனுபவம், அனைவரும் ஆச்சிரியமாய் பார்த்த சமயம், ஏதோ பெரும் சாதனை சாதித்த உணர்வு என்னுள். இன்று மீண்டும் customise tailoring எனும் வட்டத்தில் வந்து நிற்கின்றோம்.

விடலை பருவத்தில் பண்டிகைகளை வீட்டில் கொண்டாடுவதற்கு பதிலாய் சினிமா தியேட்டர்களில் கழித்த காலமும் எனக்குண்டு. திருச்சி மாரீஸ் போய்விட்டால் போதும் 1 நாளைக்கு 3 படம் பார்த்து விடலாம். படம் பார்க்கும் மகிழ்ச்சியை விட முதல் நாள் முதல் ஷோ என்னும் மயக்கம் தான் மேலோங்கி இருந்தது. படமும் புரியாது, பணம், நேரம் விரயம் வேறு, என்று புரிந்த பின் அந்த பழக்கமும் மாறியது.

தொலைக்காட்சிகள் கோலோச்ச தொடங்கிய நேரம். பல பண்டிகைகள் அதன் முன்னே கழித்தேன். காலை பட்டிமன்றம் தொடங்கி இரவு சிறப்பு திரைபடம் வரை கண்டு  கழித்த காலமுண்டு. அதுவும் சலித்து போய் மீண்டும் பண்டிகையை பண்டிகையாய் கொண்டாடி வருகிறேன் இப்போதுவரை. காரணம் ஒன்னும் பெருசா இல்லை, எல்லாம் அறிவியல் முன்னேற்றம் தான். ஏதும் எப்போவும் இணையத்தில் இருக்கும் போது அந்த நாளுக்கான முக்கியத்துவம் கொடுத்து பண்டிகையை சிறப்பாய் கொண்டாடுவது, சிறு பிள்ளைகளுக்கு அப்பழக்கத்தை ஊட்டுவது அவர்களுடன் சிறுவர்களாய் மாறி சில மணி நேரம் மகிழ்வாய் கழிப்பது என்றிருக்கின்றேன்.
வாழ்வை வளமாக்கும் பண்டிகைகளை கொண்டாடுங்கள், மகிழ்ந்திருங்கள்.





   

இக்கட்டுரை பிரதிலிபி போட்டிக்கு எழுதியது.

Friday, May 22, 2020

Meme's video version


அஜித், விஜய், ரஜினி, கமல் போன்றோர் நடித்த சில காட்சிகளின் தொகுப்பில் "பிறன்மனை நோக்காத  பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு" என்ற குறளின் கருத்தை வலுயுறுத்திய Meme.

மற்றும் 90's kidsயை கலாய்க்கும் meme, மன்னிக்கவும் STR.

quarantine டைம்ல என்கிட்ட  மனைவி, குழைந்தைகள் எதிர்பார்ப்பும், நான் செய்வதும் பற்றிய Meme.

ஜோதிகாவின் பேசிய கருத்து - என் பார்வையில் (Meme ல்).

திடீர் சைவ பிரியர்களை கேள்வி கேட்கும் Meme.

துப்புறவு பிணியாளர்களை திடீரென தெய்வமாய் மதிக்கும் சிலரை கலாய்க்கும் Meme.



Meme's என்னுடையது, videoவா மாற்றியது என் மனைவியார் வேலை.


எனவே அவுங்களுக்கும் ஒரு Meme போட்டாச்சு