பரதேசி
2 நாட்களுக்கு முன்னால் படம் பார்த்து, இப்பொழுது தான் மீண்டு வந்திருக்கின்றேன் .இங்கே நான் விமர்சனம் பண்ண போவதில்லை. எல்லோரும் ஒரு முறை கண்டிப்பாய் படம் பாருங்கள் என்ற வேண்டுக்கோள் மட்டுமே விடுகிறேன்.
வசனங்கள் மிகவும் கூர்மை
எல்லாம் 100 வருஷம் மரம்டா இது,
இலையை புடுங்கி புடுங்கி நறுங்கிப் போய் கிடக்கு
தங்கள் இனத்தையும் வளர விடாமல் நசுக்கப் போகிறார்கள் என்று சொல்லுமிடமா என்ற சந்தேகம் எனக்கு.
வெள்ளையனிடம் அடி வாங்கிய கங்காணிக் கோவத்தில் சொல்லும் வசனம்
வெள்ளகார ..ப்............மவனே
இது போல் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் இது பரதேசி விமர்சனமல்ல எனவே நீங்களே படம் பார்த்து ரசிக்க விட்டுவிடுகின்றேன் .
இந்த பாட்டு வரிகள் எல்லா பரதேசிக்கும் (பிற தேசம் சென்று பிழைப்போர் )பொருந்தும்.
ஊரெல்லாம் விட்டு நம் இளமை கெட்டு
நாம் வெளியானோம் பூனைக்கு வாக்கப்பட்டு
ஒரு மானம் கெட்டு சிறு சோறு திம்போம்
பேய் மழையோடும் பனியோடும் தூக்கங்கெட்டு
என்றும் அன்புடன்
சந்தோஷ்
No comments:
Post a Comment