More than a Blog Aggregator night writter

Wednesday, March 6, 2013

காதல் கடிதம் 

வெளிநாட்டில் இருக்கும் எங்களின் துயரங்களில் இதுவும் ஒன்று 
 
காதலிகத்தான் கண்ணமா
கடிதம் இருக்குதடி 
 
கைகோர்த்து கதைக்க முடியாவினும் 
கைப்பேசியில் கதைக்கலாம் பெண்ணே 
 
சைட் அடித்த நேரங்களை விட 
skypeக்கு செலவிட்ட நேரங்களே  அதிகம்
 
 இதழின் சுவை ருசித்திட 
இணையத்தில் (இடம்) வசதி இல்லையே 
 
கண்களில் காந்தம் இருக்கோ 
கனவுகளை கவர்ந்து போகிறதே 
 
தோளில் சாய்ந்திடும் சுகத்தை 
தொலைவுகள் தொந்தரவு செய்கின்றதே
 
காலங்கள் இப்படியே போனால் - என் 
கம்ப்யூட்டருக்கும்  வருமோ பசலை .
 
 
 
இந்த கிறுக்கல் கவிதை  நான் டெல்லியில் இருக்கும் போது கிறுக்கியது, இப்பொழுது  சில மாற்றங்கள் உடன். உங்கள் கருத்துகளை பகிரவும்.
 
என்றும் அன்புடன் 
 
சந்தோஷ்  
 
 
 


No comments:

Post a Comment