காதல் கடிதம்
வெளிநாட்டில் இருக்கும் எங்களின் துயரங்களில் இதுவும் ஒன்று
காதலிகத்தான் கண்ணமா
கடிதம் இருக்குதடி
கைகோர்த்து கதைக்க முடியாவினும்
கைப்பேசியில் கதைக்கலாம் பெண்ணே
சைட் அடித்த நேரங்களை விட
skypeக்கு செலவிட்ட நேரங்களே அதிகம்
இதழின் சுவை ருசித்திட
இணையத்தில் (இடம்) வசதி இல்லையே
கண்களில் காந்தம் இருக்கோ
கனவுகளை கவர்ந்து போகிறதே
தோளில் சாய்ந்திடும் சுகத்தை
தொலைவுகள் தொந்தரவு செய்கின்றதே
காலங்கள் இப்படியே போனால் - என்
கம்ப்யூட்டருக்கும் வருமோ பசலை .
இந்த கிறுக்கல் கவிதை நான் டெல்லியில் இருக்கும் போது கிறுக்கியது, இப்பொழுது சில மாற்றங்கள் உடன். உங்கள் கருத்துகளை பகிரவும்.
என்றும் அன்புடன்
சந்தோஷ்
No comments:
Post a Comment