More than a Blog Aggregator night writter: October 2014

Friday, October 31, 2014

இட்லி ஓர் பார்வை

இட்லி ஓர் பார்வை

மிருதுவான இட்லிக்கு 3க்கு 1னு சொன்னா அம்மா

மிருதுவான இட்லிக்கு 4க்கு 1னும், கொஞ்சம் சோடா உப்பும்னு,  சொன்னா ஹோட்டல் மாஸ்டர்

இட்லிக்கு பால் கேட்டா குழந்தை

இட்லிக்கு சாம்பார், மூணு சட்னி மற்றும் இட்லி பொடியும் கேட்டால் ஹோட்டல் கஸ்டமர்

இட்லி மட்டும் சாப்பிடுங்கனு சொன்னா டாக்டர்

இட்லி மாசம் ஒரு முறை மட்டும் சாப்பிட்டா NRI கள் அல்லது பரம ஏழை

இட்லியை சாம்பாரில் முக்கி ஸ்பூனில் சாப்பிட்டா வடஇந்தியன்

அம்மாவின் இட்லியை குறை சொல்பவன் கல்யாணத்துக்கு காத்திருக்கும் பிரம்மசாரி

அம்மாவின் இட்லிக்கு ஏங்குபவன் வீட்டை விட்டு வெளியூரில் தங்கியிருக்கும் பிரம்மசாரி

இட்லியின் வகைகளை மட்டும் 5 நிமிஷம் சொன்னா ஹோட்டல் சர்வர்

இட்லியில் பீர் ஊத்தி அடிச்சது  'சீயான்' சாமி னா - அவருக்கு சொன்னது ஹரி

இட்லி மட்டும் கேட்பவன் "கஞ்சன்" - ஹோட்டல் முதலாளியின் பார்வையில்

ஒரு ரூபாயில் இட்லி தந்தா - தமிழகத்தின் அம்மா

இட்லியின்  ingerdientகூட தெரியாட்டாலும், திங்க மட்டும் தெரிஞ்சிருந்தா நவ நாகரிக நங்கை

இட்லியில் இன்னும் எவ்வளவோ விஷயம் இருந்தாலும், இட்லியை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தாலும் கீழ உள்ளது ஏத்துக்கும்  படியாய் இருக்கு.........

இட்லியிலும் intelligentயை புகுத்தி குமட்டில் குத்தி அறிவுரை போல் சொன்னா M.R. ராதா

நீராவியை வெச்சு ரயில் விடலாமா ராக்கெட் விடலாமானு யோசிக்கிறான் வெள்ளக் காரன் ஆனா அதை வச்சி இட்லியும் புட்டும் மட்டும் செஞ்சி சாப்பிட்டுகிறான் நம ஆளு


Friday, October 24, 2014

நம்பிக்கை vs மூடநம்பிக்கை

என் பெயர் சுரேஷ்
எல்லோரும் போல நான் ஒரு சராசரி மனுசன் தான். எனக்கு என் மேல மட்டும் தான் நம்பிக்கை உண்டு.

எனக்குனு கொள்கைகள் இல்லை,

ஆனா இருக்கு .............

நான் உண்டு
என் வேலை உண்டு
என் பொழுதுப்போக்கு உண்டுனு  இருப்பேன்.

பொழுதுப்போக்குனு சொன்னா அது எனக்கு பிடிச்ச டி.ஆர்  பாட்டு கொஞ்சம், whisky கொஞ்சம்
(chivas regal  அல்லது crown royal மட்டுமே )

ஆஹா...... ஆஹா........ அற்புதம் --- ரசிச்சி குடிச்சா ரசம் தான் அமிர்தம்.

ஒரு நாள், அந்த அமிர்தம் கொஞ்சமே கொஞ்சம் அதிகமாகி சொர்கத்துக்கே கூட்டிடு போயிடிச்சி.

அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும்  விஷமாய்  மாறுமுனு புரிஞ்சிக்கிட்டேன்.

அட,  சொர்கத்துக்கும் போகல நரகத்துக்கும் போகல, நகரதிலேயே தான் இருந்தேன்.

ஆனா என்ன 9 மணி dutyக்கு 8.40க்கு ரிப்போர்ட் பண்ணும் நான் 9.10க்கு தான் எழுந்தேன். அடிச்சி புடிச்சி ஆபீஸ் போனா ..............

லேட்டா வரும்  லேகாகூட

சீக்கிரமே வந்து சீட்டுல சீட்ட தேச்சிக்கிட்டு,        சீட்டாதத்தை சிஸ்டமில் சிக்கீரட்டாயாடிக்கிட்டே,  சிலுமிசமாய் சிரிக்க,               சீனியர்லேல்லாம் சீரியசாய் சிந்தனையிலிருக்க.....

போதும் ப்பா  போதும் சீ சீரியஸ் -  இனிமே சீய் சீய்  சொல்ல கூட சி வராது.

மண்டே (monday ) அதுவுமாய் மண்டை  காயிறளவு மேனேஜர் முதல், முதலாளி வரை மூசுடாய் அலைய,

ஒரு நாள் லேட்டாய் வந்ததுக்கு -  இது ஓவர் ரியெக்க்ஷ்ன் டானு,

லேப்டாப்பை ஓபன் பன்னா                                  ஒரு மெயில்

 ஒரு மாசத்துக்கு முன்னாடி பண்ண ஒரு ப்ராஜெக்ட்-------- அதில்

ஒரு பெரிய problem.

எனக்கு இருக்கிற குட்டி மூளையை கசக்கி

analysis,      ஆராச்சிலிஸ்,              applyலிஸ்,       னு

வள்ளுவன் வாக்குகேப்ப

 சீரியஸாய்

ஒரு முறை ரீபொக்ராம் பண்ண

வாவ் problem sloved.

எல்லோரும்

என்னை புகழ

எல்லா புகழும் இறைவனுக்கேன்னு
ஏ. ஆர். ரகுமான் போல    

நா சொல்ல முடியாம போக,  (நா= நாக்கு,  நா= நான் )

நாத்திகனாய் இருப்பதின்
நஷ்டம் - இப்போது புரிய ...............  இந்த

நாளில்
நடந்தை யெல்லாம் எண்ணும் போது ;;;;;;;

இப்ப தான்
இந்த கதையின் துவக்கமே


இன்னைக்கு காலையிலே எழுந்ததே லேட்டு
இது முன்னாடிய சொன்னது தான்

பாத் ரூம்  போய்
பல் விளக்க
பிரஸ் எடுத்து ; பேஸ்ட் எடுத்தா அது காலி
புது பேஸ்ட் எடுத்து
பல் விளக்கினா

சரக்கு வாட
சரமாரி அடிக்க, புது பேஸ்டை
சபித்த படி,
சரைக்க சவர கத்தி எடுத்து
சரைக்க யோசிக்கும் போதே - இது
சராசரி நாள் இல்லை.          நாம
சீக்கிரம் ஆபீஸ் போனங்கிறது

புத்திக்கு  எட்ட,

புஸ் புஸ் சென்ட் அடிச்சி
புல் கை சட்டை போட்டு
பூளு கலர் பேன்ட் போட்டு
புகைச்ச படியே
புல்லட்டில் பறந்து
அலுவகம் நுழைந்த ஞாபகம் வர..............

இன்னைய வரை தினமும்
புஸ் புஸ் சென்ட் அடிச்சி
புல் கை சட்டைகள்  போட்டு
பூளு கலர் பேன்ட்கள்  போட்டு
தினம் ஒரு
புது பேஸ்ட்னு

குளிச்சி ஒரு மாசத்துக்கு மேல
ஆயிடிச்சி.........

தினமும் அந்த நாளின் அளவில் புகழ்ச்சி இல்லை என்றாராலும்.

அட்லீஸ்ட் வாட்ச்மன் ஆவது எனக்கு சிறப்பு வணக்கம் வைப்பதாய் நம்பிக்கொண்டு ........

வாழ்க்கைக்கு
நம்பிக்கை தேவை
தன்னம்பிக்கை தேவை
மூடநம்பிக்கை ...............