கொரோனா துதி
கோவில்களை மூட வந்த கொரோனாவே
பாஸ்கரன்களை பெயில் ஆக்க வந்த கொரோனாவே
உலகம் சுற்றிய கிழவர்களை
ஊ(வீ)ட்டுகுள் பூட்டிய கொரோனாவே
உனக்கு
சாதி மதம் பாகுபாடில்லை
நாட்டு எல்லை ஏதும் இல்லை
பள்ளி பிள்ளைகளுக்கு விடுமுறை அளித்தாய்
அவர் விளையாடிட பெற்றோரை வீட்டில் அடைத்தாய்
கை தட்ட சொன்னோரை
கை கொட்டி சந்து(தி) சிரிக்க வைத்தாய்
இவை யாவும் செய்திட நீ பறித்த உயிர் போதாதா
அப்பால் போ என்ற
தீண்டாமை வலி புரிந்தது
இப்போது நீ
அப்பால் போ
No comments:
Post a Comment