More than a Blog Aggregator night writter

Friday, April 3, 2020

சொல்லுக சொல்லை 

தமிழ் சொல்லும் parasite வார்த்தைகளும் 

ஒரு மொழி தோன்றவும் அழியவும் சொல்லே இன்றியமையாதது. பல parasite ஒட்டுண்ணிச்  சொற்களுக்கு ஓர் மொழி இடம் கொடுத்தால் அம்மொழி மெல்ல சாகும்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
இக்குறளின் பொருள் அனைவரும் அறிந்ததே.

வார்த்தைதையின் அர்த்தம் அர்த்தமற்றவை
சொல்லின் பொருள் புரிந்தவருக்கு.

இனிமையான எளிமையான தமிழ்ச் சொற்கள் இருக்க கடினமான (கஷ்டமான) ஒட்டுண்ணியை தவிர்ப்போம்.
ஒரு மொழியில் புதுச் சொற்கள் உருவாகுவது இயல்பு. ஆனால் இயல்பில் ஓர் சொல் இருக்க அதற்கு புதிய வார்த்தை உருவாக்குவது அச்சொல்லை நீர்த்துப் போக வைக்கும் செயலே.
இதற்கு எடுத்துக்காட்டு மேலே சொன்ன சொல் - வார்த்தை, பொருள் - அர்த்தம். ஏன் இதை உதாரணமாக அல்லாமல் எடுத்துக்காட்டாய் விளக்குகிறேன் என்றால் உதாரணமே ஓர் ஒட்டுண்ணி. தவறானச் சொல்.

பயன்பாட்டில் உள்ள சொல் ஒட்டுண்ணியா என்ற சந்தேகம் வந்தால் ஐயம் கொள்ள தேவையில்லை, சந்தேகம் ஓர் ஒட்டுண்ணியே.

அப்ப, எப்படி வித்தியாசம் கண்டு பிடிப்பது. ஆம் வித்தியாசத்தை கண்டு பிடித்து விட்டால் நமக்கு வேறுபாடு தெரிய ஆரம்பிக்கும், அப்போது தெளிவு பெறுவோம் வித்தியாசம் ஓர் ஒட்டுண்ணி என்று.

இதெல்லாம் ஒட்டுண்ணி சொற்களா என்று வியப்பு வருகிறதா? வரட்டும் தப்பில்லை பிரமிப்படையா வரையில். காரணம் பிரமிப்பு ஓர் ஒட்டுண்ணியே.

பள்ளிக்கூடங்களில் தமிழில் பேசினால் அபராதம் விதிப்பது தவறு, தண்டம் விதிப்பது சரியா என்றால். இல்லை. ஆனால் தண்டம் சரியான தமிழ்ச் சொல். அபராதம் ஓர் ஒட்டுண்ணி.

தண்டம் தமிழ்ச் சொல் என்றால் தண்டச்சோறும் தமிழ்ச் சொல் தானே. ஆமாம் சாதத்தில் உப்புப் போட்டு உண்ணும் அனைவருக்கும் சோறு தான் முக்கியம், சாதம் அல்ல. சாதம் தவிர்ப்போம், பிரசாதம் அறவே தவிர்ப்போம்.  சாதத்தின் மூலச் சொல் பிரசாதம் என்பதால் தானே அன்றி, இதில் நாத்திகம் ஏதுமில்லை.

விதவை என்னும் சொல்லில் (வார்த்தையில்) பொட்டு இல்லை, தமிழும் அவர்களை கை விட்டுவிட்டதே என்றதுக்கு
(கட்சிக்கு அப்பாற்பட்டு) கலைஞர் ஓர் தமிழ் அறிஞராய் சொன்னது, விதவை ஓர் ஒட்டுண்ணி. கைம்பெண் என்பதே தமிழ்ச் சொல். அதில் ஒன்றுக்கு இரண்டு பொட்டு இருக்கும். தமிழ் யாரையும் கைவிடாது, எப்போதும் கை தூக்கி மட்டுமே விடும் என்று.
சமுதாயத்தின் பார்வையில் மறுமணம் = இரு பொட்டு.
தமிழில் இருப்பது இரு புள்ளி.

இப்போது கட்சியை உட்படுத்தி ஓர் விளக்கம். நாம் தமிழர் சின்னம் (விவசாயி) ஓர் ஒட்டுண்ணி, தமிழ்ச் சொல் அல்ல.
அடங்க மறு, மண்டியிடாத மானம். தமிழர், யார் தமிழர் என்று விதைத்த வினையினால் விளைந்த வினை - கொள்கையில் சமரசம் செய்துக்கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தமிழ் அல்லாத சொல்லை ஏற்று கொண்ட கட்சி என்ற அவபெயர் தான் மிச்சம்.
உழவனே தமிழ். செய்யும் வினையே பெயராய் இருக்கும் தமிழில்.
உழுவதால் உழவர். Farm - Farmer என்பது போல்.


இவையாவும் ஒட்டுண்ணி சொற்கள், இதை தாண்டி கிரந்தச் சொற்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டுக்கு என் பெயரில் உள்ள 'ஷ' வகைகள். இன்று பலர் கிரந்தச் சொற்களை தவிர்த்து வருகின்றனர், வாழ்த்துக்குரிய செயல். போலவே இவ்வொட்டுண்ணியையும் தவிர்ப்போம்.
பல தமிழ் அறிஞர் சொல்ல கேட்டு அதை கடை பிடிக்க முயலும் கடையன் நான், எனவே
உங்களுக்கு தெரிந்த ஒட்டுண்ணி சொற்களை சொல்லுங்கள். தெரிந்துக்கொள்ள ஆவலுடன் உள்ளேன். ஆசையுடன் அல்ல காரணம் எனக்கு இருக்கும் ஐயம்
ஆசை ஓர் தமிழ்ச் சொல்லா ஒட்டுண்ணியா என்று. விளக்குவோருக்கு நன்றிகள் பல.



Monday, March 23, 2020

சாதாரண மஞ்ச பையின் கார்ப்பரேட் கதை


சில நிகழ்வுகள் சாதாரண நிகழ்வு போல தோன்றும் அல்லது தோற்றிவைக்கப்படும்.
இன்று நம் நினைவில் மங்கலாய் அல்லது மறந்த, அன்றைய தொண்ணுறுகளில் {90's kidsகளுக்கு} பயிற்சயமான சங்கதி தான்  - மஞ்ச பை.

ஆடி மாசம் துணி கடைகளில் அடிதடி கூட நடக்கும் இந்த மஞ்ச பைக்கு.
ஊரிலிருந்து மஞ்ச பையோடு மட்டும்  போய் சாதித்தவர்கள் ஏராளம்.

அடுத்து பிளாஸ்டிக் பைக்கு போவோம்.
கறி கடையில் மட்டும் தென்பட்ட இந்த வஸ்து (பொருள்-னு தமிழில் சொல்ல வேண்டாமேன்னு )
 மெல்ல......
ரொம்ப......
 சிரமப்பட்டு.......
 பிறகு அசுர வளர்சியாய் அங்கிங்கெனாதபடி எங்கும் நிலைத்து நின்றது, நிற்கின்றது.

இப்படி அது வளர பல காரணிகள் காரணமாய் இருந்தது. அதில் ஒன்றும், முக்கியமானதும் user friendly.
user  friendly என்பதில் அதை கையாளுவது, பராமரிப்பது முதல் விலை மலிவு வரை எல்லாம் அடங்கும்.

இங்கே நாம் நினைவில் கொள்ளவேண்டியது ஒன்று உள்ளது - அந்த தொழில் ரகசியம் என்னவென்றால் வணிகருக்கு லாபம் தரக்கூடியப்  பொருட்கள் மட்டும் தான் சந்தைப்  படுத்தப் படுக்கின்றது, பொது மக்கள் கைகளுக்கும் கிடைக்கின்றது.
இப்படி தான்  மஞ்ச பையா? பிளாஸ்டிக் பையா ? என்ற கேள்விக்கு வணிகர்கள் தேர்ந்தெடுத்தது தான் இந்த பிளாஸ்டிக் பை. இதனால் விளைய போகும் ஆபத்து அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை அல்லது குறைவு.

இது மக்காத குப்பை இதனால் பெரும் ஆபத்து,
தவிர்த்திடுவோம் நெகிழியை என்று இப்போது கூவுகின்றோம்.

நாமும் "பழைய குருடி கதவை திறடி" கணக்காய் மக்கும் குப்பைகளான  -  வண்ண பைகளை கையில் சுமந்துக்கிட்டுப் போகின்றோம்.

மேற்சொன்னவை சாதாரண நிகழ்வு.
வளர்ச்சி - வீழ்ச்சி - வளர்ச்சி என்கின்ற வட்டம் - னு புரிந்துக் கொள்ளலாம்
இல்லை
இதில் அரசியல் இருக்கு, சூழ்ச்சி இருக்கு, லாபம் இருக்கு, வியாபர தந்திரம் இன்னும் பலது நாம் அறியாதது இருக்கு - னு ஐயப்படலாம்.

இந்த பிளாஸ்டிக்  மெல்ல......ரொம்ப...... சிரமப்பட்டு.......எப்படி எல்லா இடங்களிலும் வந்தது. மஞ்ச பையை ஒழித்து, பின்னே அந்த இடத்தை எடுத்துக்  கொண்டது. இதுக்கு பல உள்ளடி வேலை செய்திருக்கலாம்.
மஞ்ச பையை  அவமான பொருளாய் மாற்றுவது,
(பெருசா வந்துட்டான் மஞ்ச பையை தூக்கிக்கிட்டு மஞ்ச மாக்கான்)
இப்படி மஞ்ச பை பயன்ப்  படுத்துவோரை அதில் இருந்து விலகி செல்ல வைத்து,
சந்தை படுத்தப்  படாமல் தவிர்த்து,
பின்னே  அந்த இடத்தை எடுத்து கொண்டது.

அன்று இலவசமாய் கொடுத்த இந்த பைக்கு, இன்று விலை போட்டு விற்கின்றனர். இன்னும் மேலே போய் துணி பைக்கு அதிக விலை வசூலிக்கப்படுகின்றது. 

இதில் லாபம் அன்றும் இன்றும் என்றும் வணிகர்களுக்கு மட்டுமே என்பதில் எழுகின்றது ஐயம்

பையில் மட்டும் அல்லாமல் பற்பசை, சோப்பு என்று அன்றாட பொருட்கள் பலதிலும் ஒரு மாற்றம், முன்னேற்றம் என்று நிகழ்ந்தது.

குடும்பத்ததுக்கு ஒரு சோப்பு என்கிற நிலை போய் முகத்துக்கு, கேசத்துக்கு, உடலுக்கு என்று தனித்தனியாய் ஒரு சோப்பு என்ற நிலை இன்று.

சாம்பல், கறி தூள், வேப்பங்குச்சி போய் பல் பொடி என்றாகி ஆளுக்கொரு டூத் பேஸ்ட் என்று தொடர்கிறது. அந்த பேஸ்டில் இன்று கறித்தூள், உப்பு, கிராம்பு, வேப்ப பவர் கலந்திருந்தால் சாதா பேஸ்டை விட விலை  அதிகம்.

சாம்பல், தேங்காய் நார், புளி, எலுமிச்சை கொண்டு விலக்கிய பாத்திரங்கள் அசுத்துமானவை என்று விளம்பர படுத்தி,
நுரை கொண்ட திரவம், வாசம் கொண்ட சோப்பு கட்டி, இதுவே சுத்தத்தின் ஆதாரிட்டி என்று நம்ப வைக்க பட்டது. அதில் நூறு எலுமிச்சியின் சக்தி பெற்று விலை உயர்வுடன் வலம் வருகின்றது இன்று.

புதுமையை விரும்பாத பழைமை வாதம் இல்லை இது.
செலவின்றி  அல்லது கம்மி செலவில் இருந்த பொருட்களை பயன்பாட்டிலிருந்து அகற்றி மீண்டும் அதையே அதிக விலைக்கு விற்கும் தந்திரம்.

படிப்படியாய் மூளைச் சலவை செய்யப்பட்டோமோ என்ற எண்ணம் எழ மேற்சொன்ன காரணங்களே காரணம்.

இது மட்டுமல்ல இன்னும் இருக்கின்றது. உங்களுக்கு தெரிந்ததை கமெண்டில் பிகிருங்கள்.

Sunday, March 22, 2020

கொரோனா துதி 


கோவில்களை மூட வந்த கொரோனாவே
பாஸ்கரன்களை பெயில் ஆக்க வந்த  கொரோனாவே
உலகம் சுற்றிய கிழவர்களை
ஊ(வீ)ட்டுகுள்  பூட்டிய கொரோனாவே

உனக்கு
சாதி மதம் பாகுபாடில்லை
நாட்டு எல்லை ஏதும் இல்லை

பள்ளி பிள்ளைகளுக்கு விடுமுறை அளித்தாய்
அவர் விளையாடிட பெற்றோரை வீட்டில் அடைத்தாய்

கை தட்ட சொன்னோரை
கை கொட்டி சந்து(தி) சிரிக்க வைத்தாய்

இவை யாவும் செய்திட நீ பறித்த உயிர் போதாதா
அப்பால் போ என்ற
தீண்டாமை வலி புரிந்தது

இப்போது நீ
அப்பால் போ 


Wednesday, September 25, 2019

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது
குழைந்தை பெற்ற பின்னால்

ஒரு வேளை எனக்கு வயாசயிடிச்சா இல்லை
மனசு இளகிடிச்சா இல்லை
இதய நோய் ஏதாவது ச்சி
இளகிய மனம் கொண்டவர்கள்,வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள் எல்லாம் பார்க்காதீங்க தவிர்க்கவும்னு சொன்ன வீடியோ, போட்டோ இப்படி எதையும் எந்த ஒரு கூச்சமும் இல்லாம பார்த்த என்னால்

இப்போ எல்லாம் 'காணவில்லை' போஸ்டர கூட முழுசா பார்க்க முடியல அதுலயும் அந்த போஸ்டரில் குழைந்தை சிரித்த பிடி இருந்தால் இன்னும் மோசம்.
அப்படி சிரிச்ச குழைந்தை இப்ப எப்படி கஷ்டப்படுதோனு மனசு அடிசிக்கும் அன்னைக்கு தூக்கம் தூர போயிடும்
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது

பாரத் மாதா கீ ஜே