More than a Blog Aggregator night writter

Monday, April 20, 2020

தூய தமிழன் 

காறி உமிழன் 

பேட்டி 

எனக்கு ஒரு கனவு இருந்தது தூயத்தமிழ் பிள்ளை திரு காறி உமிழனை பேட்டி எடுக்க வேண்டும் என்று.
தூக்கத்தை கெடுத்த அந்த கனவு ஒருநாள் நிறைவேறியது. அந்த பேட்டி உங்களுக்காக இதோ 👇

வணக்கம் திரு காறி உமிழன் 
இந்த கொரோனா வைரசுக்கும் இல்லுமினாட்டிகளுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றீங்க, கொஞ்சம் விளக்க முடியுமா?

காறி உமிழன் : கண்டிப்பா இது இலுமினாட்டிகளின் சதி தான். எப்படினா உலக மக்கள் தொகையை கம்மி பண்ணுவதில் அவங்க இப்ப இறங்கி இருக்காங்க. அதற்கு அவர்கள் கையில் எடுத்து இருக்கும் ஆயுதம் தான் இந்த வைரஸ் தொற்று. 

 நாம் : இந்த வைரஸை முதலில் சீனாவில்  பரப்ப காரணம், அங்கு மக்கள் தொகை அதிகம் இருப்பதாலா?

காறி உமிழன் : இல்லை. இதை உருவாக்கி பரப்பியதே சீன இலுமினாட்டிகள் தான். மக்கள் தொகையை கம்மி பண்ணுவது மட்டுமல்லாமல் அவர்கள் கைவசம் இருக்கும் அதிநவீன 5gயை மக்கள் அனைவரும் பயன் படுத்த வைக்க வேண்டும் என்பதும் அவர்களின் குறிக்கோள்.

ஒரு சின்ன எடுத்து காட்டு - கணினி துறையில் பலர் work from home எனும்  முறையில் வேலை செய்வதை அறிந்திருப்பீர்கள்.  
இந்த கொரோனாவால் இன்று அலுவல் சந்திப்புக்கள் மற்றும் பள்ளி படிப்புகள் என்று பல விதமான வேலைகளும் இணையம் வழியே நடக்கின்றது. அதை சாத்திய படுத்தியது 4g. 

இப்போது 5gக்கு வருவோம்.  5g என்பது சராசரி நிலைக்கும் உயர்ந்த தொழில் நுட்பம். அதை கொண்டு பல வியக்கத்தக்க செயல்கள் செய்ய முடியும். ஒருவரால் இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்ய முடியும். அதை கொண்டு இவர்கள் செய்ய நினைப்பது, மனித தொடர்புகளை முதலில் அழிப்பது. 
ஓட்டுனர் இல்லாத வாகனங்கள், மனித தயவு மிக மிக குறைந்த அளவே பயன் படுத்தும் எந்திரங்கள்  என்று அதன் வீச்சு மிகப் பெரியது.

இனி வரும் காலங்களில் என்னவெல்லாம் நடக்கும் என்றால்  

⏩இதில் முதலீடு செய்ய தயங்கியப் பெரு நிறுவனங்கள் இனி முதலீடு செய்வார்கள்.

⏩அலுவலகங்கள் நடத்த இடங்கள் தேவைப்படாது. எனவே அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தேவையும் குறைந்து விடும். பல தொழில்கள் அழியும்.சமுதாய சங்கிலி அறுபடும்.

இதன் பின் விளைவுகளை நீங்களே கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். 
தன்னுடன் வேலை பார்ப்பவர் யார் என்று யாருக்கும் தெரியாது. விளைவு-தொழில் சங்கங்கள் இல்லாமல் போய்விடும். 
மணி நேர ஊதியம் என்பதை ஒழித்து, பணி முடித்தால் மட்டுமே ஊதியம் என்றாகிவிடும். மிகை நேர (overtime) ஊதியம் என்பதே இல்லாமல் போய்விடும். ⏩இப்படி இதனால் ஆதாயம் அடையப்  போவது பெரு நிறுவனங்களே. 

⏩virtual reality மூலம் நீங்கள் உலகின் எந்த இடத்தையும் உங்கள் கண் முன் கொண்டு வரலாம், கூடவே அங்கு நிலவும் தட்ப பெப்ப நிலை, சுற்று சூழல், சத்தம் என்று நீங்கள் அங்கு நேரில் சென்றால் எப்படி இருக்குமோ அப்படியே உணர்வீர்கள். சுற்றுலா என்பது அரிதாகி விடும். அதை சார்ந்த பல தொழில்கள் காணாமல் போக சாத்தியம் அதிகம்.
உற்பத்தி சாரா அலுவல்கள் எல்லாம் இனி வீட்டில் இருந்தே செய்ய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்  படுவோம்.

இன்னும் நாம் கற்பனை செய்ய முடியாத பல காரியங்கள் சாத்தியம் ஆகும்.

ஆனால் இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். இன்றைய மக்களின் மன நிலைமை அதற்கு ஏற்றதாய் இல்லை, எனவே அவர்களை இதற்கு பழக்கப் படுத்த வேண்டும்.அதற்கான பிள்ளையார் சுழியே இந்த ஊரடங்கு அல்லது வீட்டிலேயே அடங்கு என்ற உலகடங்கு பின்பற்றப்  படுகின்றது.  

மனிதரை இத்தொழில் நுட்பத்துக்கு பழக்கி, அடிமை ஆக்கி, வீட்டிலேயே முடக்கி இவர்கள் சொல்வதை எல்லாம் செய்யும் பொம்மை ஆக்குவதே இவர்களின் முதன்மையான பெருந்திட்டம். 

மேலும் இது நிறுவங்களின் செலவை குறைத்து பெரு இலாபம் ஈட்டும் செயல்.

கூட்டமாய் இருந்தால் ஆடுகளும் சிங்கத்தை துரத்தி அடிக்கும். அதுவே தனித்து விடப் பட்ட யானை பலியாகும்.

இலுமினாட்டிகள் இப்போது செய்வது நம்மை தனிமைப்படுத்தி, அதை நம் புதிய வழக்கமாய் மாற்றுவதே.

நாம் : அப்படியானால் இந்த வைரஸை அழிக்கவே முடியாதா? மேலும் இந்த ஊரடங்கை பின் பற்ற கூடாதா ?

காறி உமிழன் : இலுமினாட்டிகள் இதற்கான காலக்கெடுவை ஏற்கனவே தீர்மானித்து வைத்து விட்டார்கள். அரபு தேசத்து வளமே எண்ணெய் தான். போக்குவரத்தை பெரும் அளவு குறைத்து விட்டால் எண்ணெயின் தேவை கம்மியாகி விடும், அவர்களின் வளம் குறைந்து விடும்.
அவர்களின் இலக்கை அடைந்த உடன் இந்த வைரஸை அழித்து விடுவார்கள். 
 நாம் இந்த ஊரடங்கை கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டும். ஆனால் அவர்கள் சொல்லும் தொழில் நுட்பத்தை முற்றிலுமாய் தவிர்க்க வேண்டும்.  நம் தமிழ் முன்னோர்கள் கடைப்பிடித்த உழவு, கால் நடைப் பராமரிப்பு என்ற தற்சார்பு வாழ்வையே வாழ வேண்டும். அதுவே நாம் அவர்களை வெல்லும் உத்தி. இப்படி ஒவ்வொரு தமிழனும் வாழ வேண்டும் என்பதே என் கனவு.

நாம் : உங்கள் கனவு நம்மை பின் நோக்கி இழுத்து செல்லாதா - என்னும் போதே பின் மண்டையில் ஓர் அடி "பகல்ல தூங்குறதும் இல்லாம கனவு கனவுனு கனவுல பொலம்பல் வேற"-னு மனைவி உலுப்ப எழுந்து உட்கார்ந்துட்டேன்.

ச்சே... வெறும் கனவா.... அதும் பகல் கனவா ..... அப்ப பலிக்காது என்ற மனநிறைவுடன் விடைபெற்று கொள்கிறேன்.







3 comments:

  1. மிக சிறந்த பதிவு ... மற்ற நாடுகளின் பொருளாதாரத் தை தகர்கவே இந்த உயிரியில் போர் ....மற்ற நாட்டின் பொருள்களை வாங்காமல்... நம் உள் நாட்டுபொருள்களை வாங்கி பயன் அடைவோம்...

    சீனாகாரன் சைலேண்ட் டா வேலைய பாத்துட்டு அவன் வேலைய பாக்க கிளம்பிட்டான்.....நம்ப வீட்டுக்குள்ள முடங்கி இருக்கோம்....விடியலை தேடி...

    ReplyDelete
  2. கனவா இருந்தாலும் சுவாரசியமா இருக்கு சந்தோஷ்

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு முரளிதரன் சார், கனவு நினைவாகிடுமோ என்று பயமாய் இருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம்

      Delete